நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: கள்ளிக்குடி ஒன்றியம் போத்தநதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நுாற்றாண்டு விழாவில் ஆசிரியை குணசுந்தரி வரவேற்றார். தலைமையாசிரியை சித்ரா ஆண்டறிக்கை வாசித்தார்.
வட்டார கல்வி அலுவலர்கள் மணிமேகலை, முத்துக்குமரன், வட்டார வள மையம் மேற்பார்வையாளர் வைஜெயந்தி மாலா, பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் நதியா முன்னிலை வகித்தனர்.
பள்ளியின் புரவலர் திட்டத்திற்காக ரூ. 17 ஆயிரம் ஊர் மக்களால் வழங்கப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.

