sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

திருப்பரங்குன்றத்தில் மத்திய போலீஸ் படை: திருத்தொண்டர் அறக்கட்டளை கோரிக்கை

/

திருப்பரங்குன்றத்தில் மத்திய போலீஸ் படை: திருத்தொண்டர் அறக்கட்டளை கோரிக்கை

திருப்பரங்குன்றத்தில் மத்திய போலீஸ் படை: திருத்தொண்டர் அறக்கட்டளை கோரிக்கை

திருப்பரங்குன்றத்தில் மத்திய போலீஸ் படை: திருத்தொண்டர் அறக்கட்டளை கோரிக்கை


ADDED : ஜன 31, 2025 07:27 AM

Google News

ADDED : ஜன 31, 2025 07:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றத்தில் மத்திய போலீஸ் படை கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என திருத்தொண்டர்கள் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருத்தொண்டர்கள் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில், மலைமேல் காசி விஸ்வநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு கூறியதாவது: வீறு கொண்டு வெள்ளையர்களை விரட்டி அடித்ததில் ஹிந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் சம பங்கு உண்டு. ஹிந்து, முஸ்லிம்களிடையே பிரிவினையை துாண்டிவிட சில மதவாதிகள் புறப்பட்டுள்ளனர்.

எந்த மதமாக இருந்தாலும் அன்பு தான் முதலாவதாக வணங்கப்படுகிறது.

திருப்பரங்குன்றம் பிரச்னைகள் குறித்து 1923ல் மதுரை முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தின் உத்தரவு, 1931 பிரிவியு கவுன்சில் உத்தரவுகளை, 2018ல் அரசுக்கு தெளிவாக முறையீடு செய்திருந்தோம். இந்த முறையீட்டில் மதுரை கலெக்டருக்கு உத்தரவிட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

திருப்பரங்குன்றம் பகுதியானது முருகனுக்கு சொந்தம் என்பது குறித்து மூன்று மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிடப்பட்டது. சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்காததால் இன்று சிக்கல் ஏற்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றத்திற்கு அன்னிய சக்திகள் எங்கிருந்து ஆட்களை திரட்டுகின்றனர், யார் பொருளாதார உவி செய்கிறார்கள் என்பது குறித்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும். குற்ற பின்னணி உள்ளவர்கள், தூண்டி விடுபவர்கள், மறைமுகமாக செயலாற்றக்கூடியவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

திருப்பரங்குன்றம் பிரச்னையில் மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் மத்திய போலீஸ் படை பாதுகாப்பு கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்.

அறநிலையத்துறையில் கமிஷனர் முதல் அடிமட்ட ஊழியர் வரை கோயில் வருமானத்திலிருந்துதான் சம்பளம் பெறுகின்றனர். கோயில் சொத்துக்களை பாதுகாப்பது, பராமரிப்பது இவர்கள் கடமை. ஆனால் அவர்களின் அலட்சியத்தால் தான் நடு வீதிக்கு வந்து போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.






      Dinamalar
      Follow us