ADDED : டிச 15, 2024 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: திருவாளவாயநல்லுாரில் ஜி.எச்.சி.எல்., பவுண்டேஷன் சார்பில் தையல் பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.
ஊராட்சி தலைவர் சகுபர் சாதிக் தலைமை வகித்தார். பெட்கிராட் நிர்வாக இயக்குனர் சுப்புராம் முன்னிலை வகித்தார். பொருளாளர் சாராள் ரூபி வரவேற்றார்.
பெண்கள் சுயதொழில் துவங்கி கூட்டாகவும், குழுவாகவும் செய்து வளர்ச்சியை உருவாக்கி மத்திய, மாநில அரசு வழங்கும் மானியத்துடன் வங்கி கடன் பெறலாம் என பவுண்டேஷன் நிதி பங்களிப்பு அலுவலர் சுஜின் திட்டங்கள் குறித்து விளக்கி சான்றிதழ் வழங்கி பேசினார்.