தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ரயில் சேவையில் மாற்றம்

ரயில் சேவையில் மாற்றம்

ரயில் சேவையில் மாற்றம்


ADDED : ஆக 23, 2025 05:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 23, 2025 05:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை : மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட கொடை ரோடு - சமயநல்லுார் இடையே பராமரிப்பு பணி காரணமாகரயில் சேவையில் கீழ்காணும் மாற்றங்கள் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பகுதி ரத்து ஆக.,27 முதல் 30 வரை ஈரோடு - செங்கோட்டை ரயில் (16845), திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும். ஆக.,28 முதல் 31 வரை செங்கோட்டை - ஈரோடு ரயில் (16846), திண்டுக்கல்லில் இருந்து புறப்படும். இவ்விரு ரயில்களும் திண்டுக்கல் - செங்கோட்டை இடையே ரத்து செய்யப்படுகின்றன.

பயணிகள் வசதிக்காக, ஆக., 27 முதல் 30 வரை மாலை 6:00 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06845), இரவு 10:30 மணிக்கு செங்கோட்டை செல்லும். ஆக., 28 முதல் 31 வரை அதிகாலை 5:10 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06846), காலை 9:30 மணிக்கு மதுரை வரும்.

மாற்றுப் பாதை ஆக.,27 முதல் 30 வரை குருவாயூர் - சென்னை எழும்பூர் (16128), ஆக.,28 முதல் 31 வரை செங்கோட்டை - மயிலாடுதுறை (16848), ஆக., 28, 31ல் நாகர்கோவில் - மும்பை சி.எஸ்.எம்.டி., (16352), ஆக., 29ல் கன்னியாகுமரி - ஐதராபாத் (07229), ஆக.,30ல் கன்னியாகுமரி - ஹவுரா (12666)ஆகிய ரயில்கள் விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்றுப் பாதையில் இயங்கும்.

தாமதம் ஆக., 28ல் மதுரை - பிகானீர் வாராந்திர ரயில் (22631), 40 நிமிடங்கள் தாமதமாக மதியம் 12:45 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us