ADDED : மார் 18, 2024 07:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி திருவிழா தேரோட்டத்திற்காக கோயில் முன்பு நிலை நிறுத்தப்பட்டுள்ள பெரிய வைரத் தேரை அலங்கரிக்கும் பணி துவங்கியது.
மார்ச் 29ல் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை எழுந்தருள, கிரி வீதியில் தேரோட்டம் நடைபெறும். அதற்காக கோயில் முன்பு நிலை நிறுத்தப்பட்டுள்ள
தேரை தண்ணீர், எண்ணெய் மூலம் துாய்மை பணி முடிந்து, தேரின் உச்சியில் கொடுங்கை அமைத்து அலங்கார வண்ணக் குடை துணிகள், முன் பகுதியில் நான்கு குதிரைகள் பொருத்தப்படும். இதற்கான பணிகள் நேற்று துவங்கியது ஆண்டுக்கு ஒருமுறை பங்குனி திருவிழாவில் மட்டுமே இந்த தேர் புறப்பாடாகும்.

