ADDED : பிப் 07, 2024 07:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலமேடு : பாலமேடு அருகே உள்ள சாத்தையாறு அணையில் புதுடில்லி அணை பாதுகாப்பு இயக்க அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
மத்திய சிறப்பு தலைமை பொறியாளர் ராணி தலைமையில் ஆறு பேர் கொண்ட குழுவினர் அணையின் பாதுகாப்பு தன்மை மற்றும் ஷட்டர்கள் பராமரிப்பு, பழுதுகள் குறித்து ஆய்வு செய்தனர். ஆய்வறிக்கையை மத்திய, மாநில அரசிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.
மேலும் அணையில் பூங்கா அமைப்பது, சுற்றுலா தலமாக மாற்றுவது குறித்தும் பரிந்துரைக்கப்பட உள்ளது. நீர்வளத்துறை செயற்பொறியாளர் அன்புச்செல்வன், உதவி பொறியாளர்கள், பணியாளர்கள் உடன் இருந்தனர்.

