ADDED : ஆக 28, 2026 04:28 AM
அ நிறம் | அளவு
பேரையூர்ஆக.28--: பேரையூர் மொட்டையசாமி கோயில் தெரு சதீஷ்கண்ணன் 55. இவருக்கு அலைபேசியில் அழைப்பு வந்தது. அதில், உங்களது மகளுக்கு கல்வி உதவி தொகை கிடைத்துள்ளது.
அதற்காக நீங்கள் இந்த நம்பருக்கு ரூ. ஒரு லட்சத்தி 27 ஆயிரம் அனுப்புங்கள். உங்களுக்கு உதவி தொகை அனுப்பி வைக்கிறோம், என்றனர். இதை நம்பி அவர் அந்த நம்பருக்கு பணத்தை அனுப்பினார். ஆனால் உதவித்தொகை கிடைக்கவில்லை. இவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
