ADDED : ஜன 06, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி,; உசிலம்பட்டி வடுகபட்டியைச் சேர்ந்தவர் அரசு பஸ் கண்டக்டர் சிவக்குமார் 35.
இவருக்கு தேவி என்ற மனைவியும் 2 ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இரண்டாவது மகன் சிவமித்ரனுக்கு ஒன்றரை வயது. அந்த குழந்தை வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக ஆடு, மாடுகளுக்கு குடிப்பதற்கான ஊறத்தண்ணீர் வைத்திருந்த வாளியில் தவறி விழுந்து மூச்சு திணறி உயிரிழந்தது. உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

