sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரையில் பன்னாட்டு விமான சேவை வேண்டும் சி.ஐ.ஐ., பிரதிநிதிகள் கோரிக்கை

/

மதுரையில் பன்னாட்டு விமான சேவை வேண்டும் சி.ஐ.ஐ., பிரதிநிதிகள் கோரிக்கை

மதுரையில் பன்னாட்டு விமான சேவை வேண்டும் சி.ஐ.ஐ., பிரதிநிதிகள் கோரிக்கை

மதுரையில் பன்னாட்டு விமான சேவை வேண்டும் சி.ஐ.ஐ., பிரதிநிதிகள் கோரிக்கை


ADDED : ஆக 31, 2025 04:41 AM

Google News

ADDED : ஆக 31, 2025 04:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: விசாகபட்டினத்தில் மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவை சந்தித்த சி.ஐ.ஐ., மதுரை மண்டல பிரதிநிதிகள், மதுரையை பன்னாட்டு விமான சேவையாக அறிவிக்கக் கோரிக்கை விடுத்தனர்.

சி.ஐ.ஐ., மண்டலத்தலைவர் அஸ்வின் தேசாய், முன்னாள் தலைவர் லிஜி ஜார்ஜ், மதுரை அக்ரி மற்றும் அனைத்துத் தொழில் வர்த்தகச் சங்கத் தலைவர் ரத்தினவேலு ஆகியோர் மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடுவை விசாகபட்டினத்தில் சந்தித்தனர்.

சி.ஐ.ஐ.,யின் புது மதுரை திட்டத்தின் கீழ் மதுரையை பன்னாட்டு விமான நிலையமாக மாற்றக் கோரினர். அவர்கள் கூறுகையில், 'மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான சேவையாக அறிவித்து செயல்படுத்த வேண்டும். உள்கட்டமைப்பை விரிவுபடுத்தி உள்ளூர் விமான சேவையை அதிகப்படுத்த வேண்டும்'என்றனர்.

விமானப் போக்குவரத்துத் துறை செயலாளர் சமீர் குமார் சின்ஹா, இந்திய விமான நிலைய ஆணையத் தலைவர் விபின்குமார், சி.ஐ.ஐ., துணைத்தலைவர் சுசித்ரா உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us