தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ காலை உணவு திட்டத்தை கலெக்டர் ஆய்வு

காலை உணவு திட்டத்தை கலெக்டர் ஆய்வு

காலை உணவு திட்டத்தை கலெக்டர் ஆய்வு


ADDED : டிச 20, 2024 03:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 20, 2024 03:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' முகாம் கலெக்டர் சங்கீதா தலைமையில் டிச.18ல் நடந்தது. மாணவர் விடுதி, மாவட்ட தலைமை மருத்துவமனை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.

அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பெண் தனது வீடு உசிலம்பட்டி சந்தை திடலுக்குள் நுாலகம் அருகே உள்ளது. அப்பகுதியில் 3 மாதமாக மழை நீர் தேங்குவதால் வீட்டில் உள்ள அனைவருக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க ஊராட்சி ஒன்றிய கமிஷனருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

நேற்று காலை உத்தப்பநாயக்கனுார் ஆவின் பால் குளிரூட்டு மையம், போலீஸ் ஸ்டேஷனில் ஆய்வு மேற்கொண்டார். அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவு குறித்து ஆய்வு செய்தார். ஆர்.டி.ஓ., சண்முகவடிவேல், தாசில்தார் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us