sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

உள்ளக குழு அமைக்க கலெக்டர் உத்தரவு

/

உள்ளக குழு அமைக்க கலெக்டர் உத்தரவு

உள்ளக குழு அமைக்க கலெக்டர் உத்தரவு

உள்ளக குழு அமைக்க கலெக்டர் உத்தரவு


ADDED : ஆக 27, 2025 01:03 AM

Google News

ADDED : ஆக 27, 2025 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை; மதுரை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 10க்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் பணிபுரியும் அனைத்து அலுவலகங்களிலும் பாலியல் வன்கொடுமையில் இருந்து பெண்களை பாதுகாக்க உள்ளக குழு (இன்டேர்னல் கமிட்டி) கட்டாயம் அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகள், மருத்துவமனைகள், பள்ளி, கல்லுாரிகள், கடைகள், பயிற்சி நிறுவனங்கள் என அரசு, அரசு சாரா நிறுவனங்களில் உள்ளகக் குழுவை உடனே அமைக்க வேண்டும்.

அமைத்த விவரங்களை www.tnswd-poshicc.tn.gov.in மற்றும் www.shebox.wed.gov.in என்ற 2 இணையதளங்களிலும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இக்குழுவில் 50 சதவீதம் இடம்பெற வேண்டும்.

குழுவில் உள்ள உறுப்பினர்களில் ஒருவர் தொண்டு நிறுவனம், சமூக செயல்பாட்டாளர், சட்டவல்லுனர், சமூகப்பணி கல்வியாளர்களைக் கொண்ட உள்ளக குழு அமைக்கப்ப வேண்டும். விதிமுறைப்படி புகார் பெட்டியம் வைக்கப்பட வேண்டும்.

அவ்வாறு உள்ளக குழு அமைக்காத நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். குழுஅமைத்த விவரத்தை மாவட்ட சமூகநல அலுவலகத்திற்கு தபால் மூலமாக, 'மாவட்ட சமூகநல அலுவலகம், மூன்றாவது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், மதுரை - 625 020 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மின்னஞ்சலில் eswomadurai.com என்ற முகவரிக்கும் அனுப்ப வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us