sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; அறநிலையத்துறை கமிஷனர் ஆஜர்

/

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; அறநிலையத்துறை கமிஷனர் ஆஜர்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; அறநிலையத்துறை கமிஷனர் ஆஜர்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; அறநிலையத்துறை கமிஷனர் ஆஜர்


ADDED : அக் 19, 2025 04:06 AM

Google News

ADDED : அக் 19, 2025 04:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே வெண்ணெய்மலையில் உள்ள பாலசுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அறநிலையத்துறை கமிஷனர், கலெக்டர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜராகினர்.

சென்னை ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு:

வெண்ணெய்மலையில் பாலசுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. இதற்கு சொந்தமாக கத்தப்பாறை, அதுார் பகுதியிலுள்ள 540 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன்.

2019 அக்.23ல் இரு நீதிபதிகள் அமர்வு,'ஆக்கிரமிப்பிலிருந்து கோயில் சொத்துக்களை மீட்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என உத்தரவிட்டது. இதை நிறைவேற்றாததால் அறநிலையத்துறை கமிஷனர், கரூர் கலெக்டர், கோயில் செயல் அலுவலர் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

ஏற்கனவே விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவு: இந்நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றுவதில் முன்னேற்றம் இல்லை.

சில அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், செல்வாக்கு மிக்க நபர்கள் கோயில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். வருவாய்த்துறையின் சில அதிகாரிகள் மற்றும் கோயில் அறங்காவலர்களின் உடந்தையுடன் ஆக்கிரமிப்புகள் நடந்துள்ளது. கோயில் நிலத்தை மீட்க பயனுள்ள நடவடிக்கை இல்லை.

அறநிலையத்துறை கமிஷனர், கரூர் கலெக்டர், எஸ்.பி.,கோயில் செயல் அலுவலர் ஆஜராக வேண்டும்.

இவ்வாறு உத்தர விட்டனர்.

நீதிபதிகள் பி.வேல்முருகன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது. அறநிலையத்துறை கமிஷனர் ஸ்ரீதர், கலெக்டர் தங்கவேல், எஸ்.பி.,ஜோஸ் தங்கையா, கோயில் செயல் அலுவலர் சுகுணா ஆஜராகினர்.

நீதிபதிகள்: கோயில் நிலத்தை மீட்க இந்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்தும் அதை நிறைவேற்றுவதில் முன்னேற்றம் இல்லை. நிலத்தை மீட்க அறநிலையத்துறை பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

கோயில் நிலம் தொடர்பான வருவாய்த்துறை ஆவணங்களை இந்நீதிமன்றத்தில் கலெக்டர் தாக்கல் செய்ய வேண்டும். நீதிமன்ற தடை உத்தரவு எதுவும் இல்லாதபட்சத்தில் இக்கோயில் நிலத்திலிருந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இந்நடவடிக்கைக்கு உதவ, பாதுகாப்பு அளிக்க போலீஸ் தனிப்படையை எஸ்.பி., அமைக்க வேண்டும்.

விசாரணை அக்.31 க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us