ADDED : செப் 15, 2026 07:52 PM

அ நிறம் | அளவு
மதுரை: மதுரை திருமங்கலம் – திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் துவரிமான் – கீழமாத்துார் சந்திப்பு பகுதியில் பாலம் கட்டும் பணி நடக்கிறது.
இதற்காக வாகனங்கள் செல்ல தற்காலிகமாக அமைக்கப்பட்ட மாற்றுப் பாதை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அத்துடன் புழுதி கிளம்புவதால் வாகன ஓட்டிகள் தவியாய் தவிக்கின்றனர். மருத்துவ அவசரத்திற்காக செல்லும் ஆம்புலன்ஸ்களும் நெரிசலில் சிக்கித் திணறுகின்றன. எனவே, தற்காலிக மாற்றுப் பாதையை தரமாக அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
