ADDED : ஜன 31, 2026 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் ஒன்றிய அலுவலகம் முன் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மகாத்மா காந்தி பெயர் மாற்றத்தை கண்டித்து காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்டாரத் தலைவர் சுப்பாராயலு தலைமை வகித்தார். வடக்கு வட்டார தலைவர் காந்திஜி முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயமணி, அமைப்புசாரா தொழிலாளர் மாவட்ட தலைவர் சோனைமுத்து, சோழவந்தான் நகர தலைவர் முத்துப்பாண்டி, சேகர், மனித உரிமை மாவட்ட தலைவர் முத்து, அலங்காநல்லுார் ஒன்றிய துணைத் தலைவர் மலைராஜன், திரவியம், பொது செயலாளர் மாயகிருஷ்ணன், பொருளாளர் செல்லத்துரை பங்கேற்றனர். மெழுகுவர்த்தி ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

