ADDED : பிப் 09, 2024 04:53 AM

அ நிறம் | அளவு
கள்ளிக்குடி: கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திற்குள் வலஞ்சுழி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. பிப்., 7ல் யாகசாலை பூஜை துவங்கியது. மூன்று கால யாகசாலை பூஜைக்கு பின் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டது.
ஊராட்சி ஒன்றிய தலைவர் மீனாட்சி, துணைத்தலைவர் கலையரசி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அழகு பாண்டி, தர்மராஜ், சவுந்தரராஜன், அலுவலர்கள் நடராஜன், அழகர்சாமி, ஊராட்சி தலைவர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
