
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் அருகே மேலக்கால் தர்மராஜ் நகரில் சித்தர் முத்துவடுக நாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. பிப்.,13ல் முதற்கால யாக பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கின.
நேற்று புற்று வடிவில் சுயம்புவாக எழுந்தருளியுள்ள சித்தர் மற்றும் விநாயகர், வராஹி அம்மன், ஜெனகை மாரியம்மன், சிவலிங்கம், நந்தி, மீனாட்சி அம்மன், கருப்பசுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் செய்தனர்.
சித்தர், சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சிவனடியார்கள் நாகராஜ், நாகராணி மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

