ADDED : நவ 17, 2024 06:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: மதுரை மேற்கு ஒன்றியம் தேனுார் ஊராட்சி கட்டப்புளி நகரில் சமுதாயக்கூடம் கட்ட கடந்தாண்டு தேனி எம்.பி., தொகுதி நிதியில் செப்.,3ல் பூமி பூஜை நடந்தது. இதுவரை பணி ஏதும் நடக்கவில்லை.
பா.ஜ., நிர்வாகி ஜெயபாண்டி: சமுதாயக் கூடம் கட்ட டெண்டர் எடுத்தவர் 'சப் -கான்ட்ராக்ட்' விட்டதால் பணி தாமதமானது. இதுகுறித்து கடந்த ஜன.3ல் ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனரிடம் புகார் அளித்தேன். ஜன.12ல் சோழவந்தான் தொகுதி மேம்பாட்டு நிதி வரப்பெற்று லோக்சபா தேர்தல் முடிந்தவுடன் பணிகள் துவங்கும் என்றனர். இன்று வரை பணிகள் துவங்கவில்லை. சமுதாய கூடம் கட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

