நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: திருவேடகம் விவேகானந்த கல்லுாரி பட்டமளிப்பு விழா நடந்தது. என்.சி.சி., அதிகாரி கேப்டன் ராஜேந்திரன் தலைமையில் என்.எஸ்.எஸ்., மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை நடந்தது.
கல்லுாரி செயலர் சுவாமி வேதானந்த துவக்கி வைத்தார். முதல்வர் வெங்கடேசன் வரவேற்றார். காரைக்குடி அழகப்பா பல்கலை துணைவேந்தர் ரவி, 285 மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்.
கல்லுாரி குலபதி சுவாமி அத்யாத்மனந்த, துணை முதல்வர் கார்த்திகேயன், முதன்மையர் ஜெயசங்கர், அகத்தர மைய ஒருங்கிணைப்பாளர் சதீஷ்பாபு, துறை தலைவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.