ADDED : பிப் 16, 2026 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி: உதினி பட்டியில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு சார்பில் நகல் எரிப்பு போராட்டம் நடந்தது.
மாநில இளைஞரணி நிர்வாகி அருண் தலைமையில் அமெரிக்கா -இந்தியா இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் ஒப்பந்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து ஒப்பந்த நகலை எரித்தனர். சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

