ADDED : டிச 18, 2024 07:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை மாநகராட்சி மண்டலம் 2 அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க் கூட்டம் மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் தினேஷ்குமார் தலைமையில் நடந்தது. மண்டல தலைவர் சரவணபுவனேஸ்வரி முன்னிலை வகித்தார்.
சொத்து வரி, பாதாள சாக்கடை, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளிக்கப்பட்டன. சில மனுக்கள் மீது உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த மாதம் அளிக்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. துணைமேயர் நாகராஜன், கண்காணிப்பு பொறியாளர் முஹமது சபியுல்லா, உதவி கமிஷனர் கோபு, நகர்நல அலுவலர் இந்திரா, செயற்பொறியாளர் (திட்டம்) மாலதி, பி.ஆர்.ஓ., மகேஸ்வரன் பங்கேற்றனர்.