sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரை மத்திய சிறையில் ஊழல் எஸ்.பி., முன்ஜாமின் மனு

/

மதுரை மத்திய சிறையில் ஊழல் எஸ்.பி., முன்ஜாமின் மனு

மதுரை மத்திய சிறையில் ஊழல் எஸ்.பி., முன்ஜாமின் மனு

மதுரை மத்திய சிறையில் ஊழல் எஸ்.பி., முன்ஜாமின் மனு


ADDED : டிச 28, 2024 05:31 AM

Google News

ADDED : டிச 28, 2024 05:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை மத்திய சிறையில் கைதிகள் மூலம் மேற்கொள்ளப்படும் தொழில்களுக்கு மூலப்பொருட்கள் கொள்முதல் ஊழல் விவகாரத்தில் முன்னாள் கண்காணிப்பாளர் ஊர்மிளா தாக்கல் செய்த முன்ஜாமின் மனு மீதான விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.

இச்சிறையில் கைதிகள் மூலம் மருத்துவ பேண்டேஜ், ஆபீஸ் கவர்கள் தயாரித்தல், புத்தக பைண்டிங் உட்பட பல்வேறு தொழில்கள் நடக்கின்றன. 2016 முதல் 2021 வரை கண்காணிப்பாளராக ஊர்மிளா இருந்தார். இவர் தற்போது கடலுார் சிறை கண்காணிப்பாளராக பணிபுரிகிறார்.

இவரது பணிக் காலத்தில் 2019 முதல் 2021 வரை மூலப்பொருட்கள் பல தனியார் நிறுவனங்களில் கொள்முதல் செய்யப்பட்டன. சில நிறுவனங்கள் பொருட்களை வினியோகித்தது போல் போலி பில்கள் தயாரித்து சிறை நிர்வாகத்திற்கு வழங்கின. இதன்மூலம் ரூ.1.63 கோடி வரை முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. ஊர்மிளா உட்பட 11 பேர் மீது மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிந்தனர். உயர்நீதிமன்றக் கிளையில் ஊர்மிளா முன்ஜாமின் மனு தாக்கல் செய்தார். நீதிபதி பி.தனபால் விசாரணையை ஜன.6க்கு ஒத்திவைத்தார்.






      Dinamalar
      Follow us