sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நீதிமன்ற உத்தரவு தமிழக அரசுக்கு சவுக்கடி காங்., எம்.பி., பேட்டி

/

நீதிமன்ற உத்தரவு தமிழக அரசுக்கு சவுக்கடி காங்., எம்.பி., பேட்டி

நீதிமன்ற உத்தரவு தமிழக அரசுக்கு சவுக்கடி காங்., எம்.பி., பேட்டி

நீதிமன்ற உத்தரவு தமிழக அரசுக்கு சவுக்கடி காங்., எம்.பி., பேட்டி


ADDED : அக் 15, 2025 12:39 AM

Google News

ADDED : அக் 15, 2025 12:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றத்தில் காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர் கூறியதாவது: கரூர் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு மாநில அரசுக்கு சவுக்கடி என்றால், உயர் நீதிமன்ற தீர்ப்பு மத்திய அரசுக்கு சவுக்கடியா. உச்சநீதிமன்றத்தில் மொத்தம் 2 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. எஸ்.ஐ.டி. குழு அமைத்து விசாரணை நடத்த த.வெ.க., கேட்டது. மற்றொன்று பாதிக்கப்பட்டோர் சார்பில் சி.பி.ஐ., விசாரணை வேண்டும் எனக் கேட்கப்பட்டது.

சி.பி.ஐ., விசாரணை த.வெ.க., வின் கோரிக்கை இல்லை. இருப்பினும் உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டது. சி.பி.ஐ. உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்து விசாரணையை விரைவில் முடித்து விடுமா. சி.பி.ஐ., அதிகாரிகள் இல்லாமல் தத்தளிக்கிறது. அதிக வழக்குகள் நிலுவையில் உள்ளன. சரியான தீர்வு காண முடியாத அமைப்பாக சி.பி.ஐ., மாறியுள்ளது. சி.பி.ஐ., அமித்ஷாவின் கைகளில் இருக்கிறது. சி.பி.ஐ., விசாரணையால் உடனே நியாயம் கிடைக்கும் என்பது கண்துடைப்புதான். சி.பி.ஐ., அமித்ஷா நினைப்பது போலத்தான் செயல்படுகிறது என்றார்.






      Dinamalar
      Follow us