ADDED : டிச 27, 2024 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் முத்துமாரியம்மன் கோயில் அருகே உள்ள ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையை முன்னிட்டு டிச.23 ஐயப்பனுக்கு ஆராட்டு நிகழ்ச்சியும், டிச.24 விளக்கு பூஜையும் நடந்தது.
டிச.25 அன்னதானம் நடந்தது. இரவு சுவாமி புஷ்பரதத்தில் ஊர்வலமாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைதொடர்ந்து நேற்று 500 பசுமாடுகளை கொண்டு கோ பூஜை நடந்தது. ஏற்பாட்டினை மேலுார் கிளை ஐயப்ப பக்தர்கள் மற்றும் அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.