sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தண்ணீர் பற்றாக்குறையால் பதராகிப்போன பயிர்கள்

/

தண்ணீர் பற்றாக்குறையால் பதராகிப்போன பயிர்கள்

தண்ணீர் பற்றாக்குறையால் பதராகிப்போன பயிர்கள்

தண்ணீர் பற்றாக்குறையால் பதராகிப்போன பயிர்கள்


ADDED : ஜன 18, 2024 06:29 AM

Google News

ADDED : ஜன 18, 2024 06:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார் : செம்மனிப்பட்டியில் அறுவடை செய்ய வேண்டிய நிலையில் தண்ணீர் பற்றாக்குறையால் நெற் பயிர்கள் பதராகிப் போனதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

செம்மனிபட்டியில் பெரியாறு கால்வாய் இல்லாததால் விவசாயிகள் மழையை நம்பி நெல் சாகுபடி செய்வது வழக்கம். கடந்த அக்டோபரில் பெய்த மழையை நம்பி விவசாயிகள் கூத்தன் கண்மாயில் தண்ணீரை நிரப்பி நெல் சாகுபடியில் ஈடுபட்டனர். அறுவடை செய்ய வேண்டிய நிலையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பயிர்கள் பதராகி விட்டது.

விவசாயி சாகுல்ஹமீது: நுாறு நாட்களுக்கு முன் ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் செலவு செய்து நெல் பயிரிட்டோம். அறுவடைக்கு 15 நாட்கள் உள்ள நிலையில் கண்மாயில் தண்ணீர் இல்லாததால் நெற் பயிரில் பால்(அரிசி) பிடிக்காமல் பதராகி விட்டது. இதனால் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளோம்.

விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.428 வீதம் பயிர் காப்பீடு செய்துள்ளோம். அதனால் வேளாண், வருவாய், காப்பீடு துறையினர் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us