sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வரப்புகளில் பயறுவகை சாகுபடி

/

வரப்புகளில் பயறுவகை சாகுபடி

வரப்புகளில் பயறுவகை சாகுபடி

வரப்புகளில் பயறுவகை சாகுபடி


ADDED : ஜன 23, 2025 04:25 AM

Google News

ADDED : ஜன 23, 2025 04:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அலங்காநல்லுார்: ''நெல் வயல் வரப்புகளில் பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்வதால் மண்வளம் பெருகும். கூடுதல் லாபம் பெறலாம்'' என அலங்காநல்லுார் வேளாண்மை உதவி இயக்குனர் தெய்வேந்திரன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: பருவ மழை மூலம் கிடைக்கும் ஈரப்பதத்தை பயன்படுத்தி வயல் வரப்பு ஓரங்களில் பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்வதன் மூலம் விவசாயிகள் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம். வரப்புகளில் களைச்செடிகள் வளர்வது தடுக்கப்படும். தீமை செய்யும் பூச்சிகள் கட்டுப்படுத்தப்பட்டு நன்மை செய்யும் பூச்சிகள் அதிகரிக்கும்.

இதற்கு தேவையான பயறு வகை விதைகள், விதை நேர்த்திக்கு தேவையான ரைசோபியம், சூடோமோனாஸ், டிரைகோடெர்மா, விரிடி போன்றவை அலங்காநல்லுார் வட்டார வேளாண் விரிவாக்க மையங்களிலும் கிடைக்கிறது. அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வரப்பு பயிர்கள் சாகுபடிக்கு தேவையான விதைகள் 50 சதவீத மானியத்தில் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us