ADDED : செப் 09, 2026 06:52 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் நுண்கீரை வளர்ப்பு, மதிப்பு கூட்டுதல் பயிற்சி நடந்தது.
திட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் நுண்கீரைகளின் முக்கியத்துவம் பற்றி விளக்கினார். உதவி பேராசிரியர் அருளரசு கீரை விதைகள் தேர்ந்தெடுக்கும் முறை, வளர்ப்பு குறித்து பேசினார். யுவராஜ் தட்சிணாமூர்த்தி நுண்கீரை வளர்ப்பு செயல்விளக்கம் அளித்தார். இணைப் பேராசிரியர்கள் ஆனந்த், சுப்பிரமணியன், செல்வராணி, டாக்டர் சரவணன், உதவி பேராசிரியை ஜோதிலட்சுமி கலந்து கொண்டனர். பங்கேற்றோருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
