ADDED : பிப் 05, 2024 12:31 AM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம் : பாரதிய மஸ்தூர் சங்க பிரதிநிதிகள் மாநாடு திருப்பரங்குன்றத்தில் நடந்தது.
மாநில தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். செயலாளர் தணிகையரசு வரவேற்றார். அகில பாரத துணை தலைவர் மல்லேசம், தென்பாரத அமைப்புச் செயலாளர் துரைராஜ், துணை அமைப்பு செயலாளர் ராஜீவன், மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ் பேசினர்.
மாநில பொதுச் செயலாளர் விமேஸ்வரன் தீர்மானங்கள் வாசித்தார். பொருளாளர் சரவணபவன் நிதி நிலை அறிக்கை வாசித்தார்.
