நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் கேட்டுக்கடையில் வி.சி.க., சார்பில் சோழவந்தான் தொகுதியிலுள்ள பஞ்சமி நிலங்களை மீட்டுத் தரக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளர் சிந்தனை வளவன் தலைமை வகித்தார்.
மாவட்ட நிர்வாகிகள் ராமச்சந்திரன், கணபதி, மணிமொழியன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் பாலமுருகன் வரவேற்றார். அமைப்பு செயலாளர் எல்லாளன், துணை பொதுச்செயலாளர் கனியமுதன், மாநில செயலாளர் பொன்னானை, செல்வரசு பங்கேற்றனர். நகர பொருளாளர் ராமதாஸ் நன்றி கூறினார்.