ADDED : நவ 05, 2025 01:09 AM
அ நிறம் | அளவு
திருமங்கலம்: திருமங்கலம் ஆலம்பட்டியில் 2 அலைபேசி டவர்கள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது.
இந்நிலையில் ஆத்மலிங்க நகர் குடியிருப்பு பகுதியில் மூன்றாவதாக ஒரு அலைபேசி டவர் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதனால் அப்பகுதியில் கதிர்வீச்சு அதிகரித்து குழந்தைகள், முதியோர் பாதிக்கப்படுவர் எனக் கூறி அந்தப் பகுதியினர் 50-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
