ADDED : செப் 01, 2026 07:11 PM
அ நிறம் | அளவு
மதுரை: உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்., எம்.பி., ராகுல் மீது வழக்குப் பதிவு செய்ததை கண்டித்து மதுரையில் நகர் காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
நகர் தலைவர் நல்லமணி தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர்கள் செய்யதுபாபு, சுப்பையா, கவுன்சிலர்கள் போஸ், முருகன், நிர்வாகிகள் வரதராஜன், மகளிரணி நிர்வாகிகள் பஞ்சவர்ணம் பங்கேற்றனர்.
