sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

'போஸ்டிங்' கிடைத்தும் மருத்துவ உளவியலாளர்கள் 14 மாதங்களாக வேலை தராமல் இழுத்தடிப்பு

/

'போஸ்டிங்' கிடைத்தும் மருத்துவ உளவியலாளர்கள் 14 மாதங்களாக வேலை தராமல் இழுத்தடிப்பு

'போஸ்டிங்' கிடைத்தும் மருத்துவ உளவியலாளர்கள் 14 மாதங்களாக வேலை தராமல் இழுத்தடிப்பு

'போஸ்டிங்' கிடைத்தும் மருத்துவ உளவியலாளர்கள் 14 மாதங்களாக வேலை தராமல் இழுத்தடிப்பு


ADDED : டிச 10, 2024 05:32 AM

Google News

ADDED : டிச 10, 2024 05:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எம்.பில்., சைக்கலாஜி முடித்தவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக அரசு மருத்துவமனைகளில் மனநலப்பிரிவில் மருத்துவ உளவியலாளர் (உதவி பேராசிரியர்) பணியிடத்திற்கான டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு வெளியிடப்பட்டது.

2023 செப்.,15ல் எழுத்துத் தேர்வு, அக்.,10ல் நேர்காணல் தேர்வு நடத்தப்பட்டது. ஒவ்வொருவருக்கும் 5 முறை போலீஸ் மூலம் சரிபார்ப்பு பணி முடிந்த நிலையில் 'போஸ்டிங்' சான்றிதழ் வழங்கப்பட்டது.

காத்திருந்து காத்திருந்து


'போஸ்டிங்' வந்த 3 மாதங்களில் வேலையில் சேர வேண்டும் என்பதால் ஏற்கனவே தனியார் மருத்துவமனைகளில் வேலை பார்த்தவர்கள், பிஎச்.டி.,தேர்வு செய்தவர்கள் அரசுப்பணிக்காக வேலை, படிப்பை விட்டு காத்திருந்தனர். நேர்காணல் முடிந்து 14 மாதங்களாகியும் தற்போது வரை வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை.

தமிழ்நாடு மனநல உளவியல் சங்கத்தினர் கூறியதாவது:

தமிழகத்தில் 37 அரசு மருத்துவக் கல்லுாரிகள் இருந்தாலும் மருத்துவ உளவியலாளர் 11 பேரே உள்ளனர். அதிலும் 4 பேர் சென்னையை சுற்றி உள்ளனர். மீதியுள்ள 7 பேர் 37 மாவட்டங்களில் உள்ள மனநல நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனையும்உளவியல் திறன் மதிப்பீடும் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு நோயாளியிடமும் தனியாக பேசி அவர்களின் உளவியல் நிலை குறித்து அறிக்கை வழங்குவது மருத்துவ உளவியலாளர்களின் பணி.

கொரோனாவுக்கு பின் ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் தினமும் 40 முதல் 100 நோயாளிகள்மனநல சிகிச்சைக்கு வருகின்றனர். பழைய நோயாளிகள் எண்ணிக்கை200 முதல் 500ஐ தாண்டும். இதில் 10 சதவீதம் பேருக்கு உளவியல் திறன் மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது.

6 முதல் 7 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மருத்துவ உளவியலாளர் உள்ள அரசு மருத்துவமனைக்கு குறைந்தது 2 முதல் 3 முறை வரவேண்டும். மனநலம் பாதிக்கப்பட்டவரோடு 100 முதல் 200 கி.மீ., துாரம் பயணிக்கும் அவர்களது உறவினர்கள் பணச்செலவோடு மனஉளைச்சலுக்கும் ஆளாகின்றனர்.

பணியிடங்களின் எண்ணிக்கையை நுாறாக அதிகரிக்க வேண்டும். 'போஸ்டிங்' கிடைத்தவர்களுக்கு உடனடி வேலை வழங்க வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us