தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சோழவந்தானில் பக்தர்கள் பரவசம்

சோழவந்தானில் பக்தர்கள் பரவசம்

சோழவந்தானில் பக்தர்கள் பரவசம்


UPDATED : மே 26, 2026 07:51 PM

ADDED : மே 26, 2026 07:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 26, 2026 07:51 PM ADDED : மே 26, 2026 07:42 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சோழவந்தான்: -சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதம் வரும் அமாவாசைக்கு அடுத்த திங்கள் விழா தொடங்கி 17 நாட்கள் நடக்கும். இந்தாண்டு மே 18ல் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். தினமும் சிம்மம், ரிஷபம், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் பவனி நடந்தது.



விழாவின் முக்கிய நிகழ்வாக (மே 26)-ல் திரளான பக்தர்கள் உருண்டு கொடுத்தும், அலகு குத்தியும், பால்குடம், தீச்சட்டி எடுத்தும் நான்கு ரத வீதிகளில் சுற்றி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நிர்வாக அலுவலர் ராஜா, கோயில் பணியாளர்கள் ஏற்பாடு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us