/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அமெரிக்காவிலும் பக்தி வகுப்புகள் சைவ சித்தாந்த கருத்தரங்கில் பேச்சு
/
அமெரிக்காவிலும் பக்தி வகுப்புகள் சைவ சித்தாந்த கருத்தரங்கில் பேச்சு
அமெரிக்காவிலும் பக்தி வகுப்புகள் சைவ சித்தாந்த கருத்தரங்கில் பேச்சு
அமெரிக்காவிலும் பக்தி வகுப்புகள் சைவ சித்தாந்த கருத்தரங்கில் பேச்சு
ADDED : ஜன 25, 2026 05:36 AM

மதுரை: மதுரை வெள்ளச்சாமி நாடார் கல்லுாரியில் சைவ சித்தாந்த பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது.
வடஅமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை இணைத்தலைவர் ஷீலா ரமணன் பேசியதாவது: எனது சொந்த ஊர் தேனி. சைவ சித்தாந்த கலாசாரத்தையும் பண்பாட்டையும் அமெரிக்கர்கள் மதித்து கடைபிடிக்கின்றனர். கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி, கந்த சஷ்டி போன்ற ஹிந்து விழாக்கள்சிறப்பாக நடக்கும். அமெரிக்காவில் நான் வசிப்பது டெக்சஸ் மாகாணம்.அங்கு பெருமாளும், சிவனும் உள்ளனர். 140 படிகள்கொண்ட சிவன் கோயில் உள்ளது.
அமெரிக்க கோயில்களில் காவடி, பால்குடம் எடுப்பது அங்கு வசிக்கும் நமது அடுத்ததலைமுறையினருக்கு சைவ சித்தாந்த சிந்தனைகளும், பக்தியும் சென்று சேருவதற்காக தான். அமெரிக்காவில் உள்ள பல கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை பக்தி வகுப்புகள் நடக்கும். வீட்டில் அவர்கள் அதிகம் பேசுவது தமிழ்தான் என்றார்.
சைவ சித்தாந்த பெருமன்ற தலைவர் நல்லுார் சரவணன், முன்னாள் எம்.பி., பெல்லார்மின், பேராசிரியர்கள் கலாராணி, வினுப்ரியா, பரணி ராணி, பொன் கதிரேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

