
மதுரை: மதுரை தல்லாகுளம் பி.எஸ்.என்.எல்., வளாகத்தில் ஓய்வூதியர் சங்கங்களின் தேசிய ஒருங்கிணைப்பு குழு (என்.சி.சி.பி.ஏ.,) சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.
மத்திய அரசு சமீபத்தில் இயற்றிய பென்ஷன் சீர்திருத்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். 8வது ஊதியக் குழுவில் ஓய்வூதியர்களையும் இணைத்து பரிசீலிக்க அரசு உத்தரவிட வேண்டும். ஊதியக்குழு பரிந்துரைகளை 2026 ஜன. 1 முதல் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
என்.சி.சி.பி.ஏ., மாவட்ட தலைவர் சங்கரநாராயணன், செயலாளர் சவுந்திரராஜன், பி.எஸ்.என்.எல்., டாட் ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் செல்வின் சத்தியராஜ், போஸ்டல் ஆர்.எம்.எஸ்., மாவட்ட செயலாளர் பாண்டியன், அக்கவுன்ட்ஸ், ஆடிட் ஓய்வூதியர் சங்க மதுரை கிளை கன்வீனர் சீனிவாசன், வருமான வரி ஓய்வூதியர் சங்க மண்டல செயலாளர் துளசிராம், தட்சிண ரயில்வே பென்ஷனர்ஸ் யூனியன் கோட்ட தலைவர் கல்யாண சுந்தரம் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

