நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை விரகனூரில் நேற்று முன்தினம் இரவு மழையால் மின்தடை
ஏற்பட்டது.
நேற்று குறைந்த அழுத்த மின்சாரம் வினியோகிக்கப்பட்டதால்,
அப்பகுதி குடியிருப்போர் சங்க தலைவர் மகாராஜன் தலைமையில் இரவு 9 மணிக்கு
மறியலில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் தெய்வீக பாண்டியன் சமரசத்தில்
ஈடுபட்டார். பழுதடைந்துள்ள டிரான்ஸ்பார்மரை நாளை (இன்று) சீரமைத்து தருவதாக
மின்வாரிய அதிகாரிகள் உறுதியளித்தனர். பின் அனைவரும் கலைந்து சென்றனர்.