ADDED : ஜன 15, 2026 06:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் ஆலங்கொட்டாரத்தில் உயர் மின்னழுத்த கம்பிகளில் செடி, கொடிகள் படர்ந்து தோரணம் போல காட்சியளித்தன. காற்று வீசும்போது இவை அடிக்கடி உரசி மின்தடை ஏற்படவும், விபரீதம் விளையவும் வாய்ப்பிருந்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் படத் துடன் செய்தி வெளியானது.
இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்தனர். மின்கம்பிகளில் படர்ந்திருந்த செடி, கொடிகளை அகற்றி சரிசெய்தனர். இதனால் பொதுமக்கள் அதிகாரிகள், தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.

