ADDED : பிப் 05, 2025 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி: வீரசூடாமணி பட்டியில் மேல்நிலைத் தொட்டி கட்டியும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. அதனால் பொது மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் அவதிப்பட்டனர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
அதன் எதிரொலியாக ஊராட்சிகள் உதவி இயக்குனர் அரவிந்த், கொட்டாம்பட்டி மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் முத்தையா மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். தண்ணீர் கசிவு உள்ளதா என ஆய்வு செய்து, உடனே தொட்டியில் தண்ணீர் ஏற்ற உதவி இயக்குனர் உத்தரவிட்டார்.