ADDED : ஜன 24, 2025 04:45 AM
அ நிறம் | அளவு
பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி தாவரவியல் துறை, தேசிய தாவரவியல் ஆராய்ச்சி மையம் சார்பில் மலர் சாகுபடி குறித்து விவசாயிகள், விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நடந்தது. முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார். துணை முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தார். துறை தலைவர் வாசுதேவன் வரவேற்றார்.
தேசிய தாவரவியல் ஆராய்ச்சி மைய தலைமை விஞ்ஞானி ராவ், விஞ்ஞானி விஜய் ஆனந்தராஜ், தேனி வளர்ப்பு துறை இணை பேராசிரியர் சுரேஷ், நுண்ணீரியல் துறை தலைவர் சிவக்குமார் பேசினர். தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பிரபா, விவசாயிகளுக்கு மல்லிகை கன்று வழங்கினார்.
