UPDATED : செப் 15, 2026 07:02 PM
ADDED : செப் 15, 2026 06:53 PM
அ நிறம் | அளவு
மதுரை:மதுரை வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் வேளாண் அறிவியல் நிலையம், வேளாண் துறை அட்மா திட்டம் சார்பில் விவசாயிகள், விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
வேளாண் இணை இயக்குநர் பொறுப்பு ராணி தலைமை வகித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், பயிர் இனப்பெருக்கவியல் துறை இணைப் பேராசிரியர் ஆனந்த், தோட்டக்கலைத் துறை உதவி பேராசிரியர் அருளரசு ஆகியோர் பேசினர். வேளாண் அலுவலர் கருப்பசாமி ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
