sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

டி.கல்லுப்பட்டி குறுவட்ட விளையாட்டு போட்டிகள்

/

டி.கல்லுப்பட்டி குறுவட்ட விளையாட்டு போட்டிகள்

டி.கல்லுப்பட்டி குறுவட்ட விளையாட்டு போட்டிகள்

டி.கல்லுப்பட்டி குறுவட்ட விளையாட்டு போட்டிகள்


ADDED : ஆக 03, 2025 04:01 AM

Google News

ADDED : ஆக 03, 2025 04:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எழுமலை : எழுமலையில் நடந்த டி.கல்லுப்பட்டி குறுவட்ட விளையாட்டுப் போட்டிகளில் மாணவர் பிரிவில் எழுமலை பாரதியார் பள்ளியும், மாணவியர் பிரிவில் அத்தி பட்டி ராமையாநாடார் பள்ளியும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றன.

எழுமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நடத்திய இப்போட்டிகள் எழுமலை பாரதியார் மெட்ரிக் பள்ளியில் நடந்தது. தலைமை ஆசிரி யர் ஜீவா வரவேற்றார். பாரதியார் பள்ளித் தாளார் பொன்கருணாநிதி, முதல்வர் ஆறுமுகசுந்தரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

14 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில் எழுமலை விஸ்வ வித்யாலயா மாணவர் சரவணவேல், டி.கல்லுப்பட்டி லார்டு வெங்கடேஷ்வரா பள்ளி மாணவர் சக்திகுரு ஆகியோர் தலா 8 புள்ளிகள் எடுத்து தனிநபர் சாம்பியன் பெற்றனர்.

மாணவியர்கள் பிரிவில் டி.குன்னத்துார் அரசு பள்ளி மாணவி முத்துபாண்டீஸ்வரி, எழுமலை விஸ்வவித்யாலயா மாணவி தான்யாஸ்ரீ, அத்திபட்டி ராமையாநாடார் பள்ளி மாணவி பூமிகாதேவி ஆகியோர் தலா 10 புள்ளிகள் எடுத்து தனிநபர் சாம்பியன் பெற்றனர். 17 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில் பாரதியார் மெட்ரிக் பள்ளி மாணவர் பிரவீன்குமார் மற்றும் மாணவியர் பிரிவில் டி.கிருஷ்ணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஹன்சிகா ஆகியோர் தலா 15 புள்ளிகள் பெற்று தனிநபர் சாம் பியன் பெற்றனர்.

19 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில் எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் முத்துப்பாண்டி, டி.கிருஷ்ணாபுரம் அரசு மேல் நிலைப் பள்ளி மாணவி சர்மிதா ஆகியோர் தலா 15 புள்ளிகள் பெற்று தனிநபர் சாம்பியன் பெற்றனர்.

போட்டிகளை எழுமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் தங்கப்பாண்டி ஒருங்கிணைத்தார். உடற்கல்வி ஆசிரியர் ஜெய சீலன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us