sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மனு வாங்கி மக்களை ஏமாற்றும் தி.மு.க., அரசு உதயகுமார் சாடல்

/

மனு வாங்கி மக்களை ஏமாற்றும் தி.மு.க., அரசு உதயகுமார் சாடல்

மனு வாங்கி மக்களை ஏமாற்றும் தி.மு.க., அரசு உதயகுமார் சாடல்

மனு வாங்கி மக்களை ஏமாற்றும் தி.மு.க., அரசு உதயகுமார் சாடல்


ADDED : ஜூலை 23, 2025 05:41 AM

Google News

ADDED : ஜூலை 23, 2025 05:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாடிப்பட்டி : 'தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்த போதும் மக்களிடம் மனு வாங்கியது. ஆளுங்கட்சியாக இருக்கும் போதும் மனுக்கள் வாங்கி மக்களை ஏமாற்றும் அரசாக ஸ்டாலின் அரசு உள்ளது' என சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் கூறினார்.

வாடிப்பட்டி அருகே கட்டகுளத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பிறந்தநாள் விழாவில்

அவர் பேசியதாவது: 520 தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்தீர்களே அது என்னாச்சு என முதல்வர் ஸ்டாலினை மக்கள் கேட்கிறார்கள்.100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக தருகிறோம் என்று சொன்னீர்களே. தற்போது 20 அல்லது 5 நாட்கள் தான் தருகிறார்கள்.

தமிழகத்தில் தினமும் 150 கோடி மது பாட்டில் விற்பனையாகின்றன. ஒரு பாட்டிலுக்கு ரூ.10 வீதம் 5400 கோடி வரி கட்டாமல் எடுக்கிற பணம் எங்கே போகிறது. ஸ்டாலின் குடும்பத்துக்கு செந்தில்பாலாஜி தியாகியாக தெரிகிறார். மக்கள் வறுமையை பயன்படுத்தி கிட்னி திருட்டு நடந்து வருகிறது. தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்தபோதும் மக்களிடம் பெட்டி வைத்து மனு வாங்கியது, தற்போது உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் மனு வாங்கி மக்களை ஏமாற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என்றார்.






      Dinamalar
      Follow us