/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அரசு சுவரில் விளம்பரம் தி.மு.க., எதிர்ப்பு
/
அரசு சுவரில் விளம்பரம் தி.மு.க., எதிர்ப்பு
ADDED : நவ 22, 2024 04:31 AM
உசிலம்பட்டி: உசிலம்பட்டி பழைய தாலுகா அலுவலகம் அருகே சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. அரசியல் கட்சியினர் இந்த அலுவலகத்தின் சுவரில் அவ்வப்போது கட்சி விளம்பரங்களை எழுதுவது வாடிக்கை. வரும் டிசம்பரில் அ.ம.மு.க., தலைவர் தினகரன் பிறந்த நாளை முன்னிட்டு கட்சியினர் அவரது உருவப் படத்துடன் சுவர் விளம்பரம் எழுதி வருகின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் அஜித்பாண்டி தலைமையில் கட்சியினர் சார்பதிவாளர் ஜியாவுதின், போலீசில் புகார் செய்தனர். இதனால் இரு கட்சி நிர்வாகிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. விளம்பரம் எழுதுவதை தற்காலிகமாக நிறுத்திய போலீசார் இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.