ADDED : மார் 13, 2026 06:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி: சிவகங்கை மாவட்டம் காலாப்பூர் ரத்தினம் 84, ஓம் சரவணா என்ற பெயரில் டிரைவிங் ஸ்கூல் நடத்தினார். நேற்று காலை டிரைவிங் ஸ்கூலுக்கு சொந்தமான காரில், தெக்கூர் ஜெய கண்ணன், கோவில்பட்டி அரவிந்த், சிங்கமங்களபட்டி வினோத், மூவன்பட்டி முத்துராஜா உள்ளிட்ட 7 பேருக்கு ரத்தினம் கார் ஓட்டும் பயிற்சி அளித்தார்.
கொட்டாம்பட்டி 4 வழிச்சாலையில் அரவிந்த் காரை ஒட்டிச் சென்றார். எதிரே மதுரை நோக்கி சென்ற கார் மோதியதில் ரத்தினம் இறந்தார்.
மற்றவர்கள் காயங்களுடன் மேலுார் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர் லோகநாதன் விசாரிக்கிறார்.

