ADDED : ஜூன் 20, 2025 05:41 AM
அ நிறம் | அளவு
அவனியாபுரம்: துபாயிலிருந்து வழக்கமாக இந்த பயணிகள் விமானம் காலை 11:10 மணிக்கு மதுரை வந்து மதியம் 12:05 மணிக்கு துபாய் செல்லும். அந்த விமானம் நேற்று ஏழரை மணி நேரம் தாமதமாக மாலை 6:40 மணிக்கு தான் மதுரை விமான நிலையம் வந்தது.
இதனால் அந்த விமானத்தில் செல்ல வேண்டிய பயணிகள் விமான நிலைய வளாகத்திலேயே பல மணி நேரம் காத்திருந்தனர். இதில் பெண்கள், முதியவர்கள் அவதிக்குள்ளாயினர். ஒரு வழியாக அந்த விமானம் பயணிகளை ஏற்றிக் கொண்டு நேற்றிரவு 8:00 மணிக்கு துபாய் புறப்பட்டு சென்றது.
