sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

குன்றத்து கோயிலில் சுவாமிகளுக்கு மண்பானை பொங்கல் படையல்

/

குன்றத்து கோயிலில் சுவாமிகளுக்கு மண்பானை பொங்கல் படையல்

குன்றத்து கோயிலில் சுவாமிகளுக்கு மண்பானை பொங்கல் படையல்

குன்றத்து கோயிலில் சுவாமிகளுக்கு மண்பானை பொங்கல் படையல்


ADDED : ஜன 14, 2025 11:13 PM

Google News

ADDED : ஜன 14, 2025 11:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப் பொங்கலை முன்னிட்டு சுவாமிகளுக்கு மண்பானையுடன் பொங்கல் படைக்கப்பட்டது.

கோயிலில் வழக்கமாக தினம் வெண்கல பானைகளில் பிரசாதம் தயாரித்து சுவாமிகளுக்கு படைத்து பூஜை நடைபெறும். தைப் பொங்கலை முன்னிட்டு கோயில் மடப்பள்ளியில் மண்பானைகளில் பொங்கல் தயாரித்து மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்கை, சத்தியகிரீஸ்வரர், பவளக்களிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை அம்பாள் சன்னதிகளில் பானையுடன் படைக்கப்பட்டு பூஜை, தீபாராதனை நடந்தது. பின்பு உற்ஸவர்கள் முன்பு படைக்கப்பட்டது.

தைப் பொங்கல் அன்று மட்டுமே மண்பானையில் பொங்கல் வைத்து பானையுடன் சுவாமிக்கு படைக்கப்படும்.

திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் மூலவர்கள் விநாயகர், வள்ளி, தெய்வானை, கல்யாண முருகன், ஸ்ரீதேவி, பூமாதேவி ஸ்ரீநிவாசப் பெருமாள், மீனாட்சி அம்மனுக்கு வெள்ளிக் கவசங்கள் சாத்துப்படியாகி பொங்கல் படைத்து பூஜை நடந்தது.






      Dinamalar
      Follow us