ADDED : செப் 18, 2025 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநகர் : திருப்பரங்குன்றம் இந்திய கம்யூ. தாலுகா குழு சார்பில் திருநகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் மகாமுனி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் முத்துவேல், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர்கள் சந்தானம், விருமாண்டி பேசினர்.
நிலையூர் பெரிய கண்மாயில் விதிகளுக்கு முரணமாக வழங்கப்பட்ட தனி நபர் பட்டாவை ரத்து செய்ய வேண்டும். 13 ஊருணிகளை மீட்க வேண்டும். தோப்பூர் ஊருணி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். தென்கால் கண்மாயில் கொட்டப்பட்ட மணலை அகற்றி, கரையை பலப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
கட்டுப்பாடு குழு உறுப்பினர் காளிதாஸ் பேசினார். பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.