sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வேனில் இருந்து விழுந்த முதியவர் பஸ் ஏறி பலி

/

வேனில் இருந்து விழுந்த முதியவர் பஸ் ஏறி பலி

வேனில் இருந்து விழுந்த முதியவர் பஸ் ஏறி பலி

வேனில் இருந்து விழுந்த முதியவர் பஸ் ஏறி பலி


ADDED : மார் 27, 2025 04:49 AM

Google News

ADDED : மார் 27, 2025 04:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம்: தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா பாறைப்பட்டியை சேர்ந்தவர் மாடசாமி 60. இவர் அந்தப் பகுதியை சேர்ந்த திருமலை முருகன் என்பவரிடம் பழைய அலைபேசி டவர்களை பிரிக்கும் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் திருமலை முருகனுக்கு சொந்தமான மினி வேனின் பின்பகுதியில் அமர்ந்து மாடசாமி, கடற்கரை வேலு, வெள்ளைச்சாமி ஆகியோர் திண்டுக்கல்லுக்கு சென்றனர்.

வேனை பாறைப்பட்டி கந்தகுமார் ஓட்டிச் சென்றார். கப்பலுார் டோல்கேட் அருகே மேம்பாலத்தை கடக்க முயன்ற போது வேனில் இருந்த மாடசாமி தவறி ரோட்டில் விழுந்தார். அப்போது வேனின் பின்னால் மதுரை நோக்கிச் சென்ற அரசு பஸ் மாடசாமியின் தலைமீது ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். வேனை ஓட்டிச் சென்ற கந்தகுமார், பஸ்சின் டிரைவர் ஆகியோர் மீது வழக்கு பதிந்து திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us