sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தேர்தல் வழக்கு: ஏட்டுக்கு வாரன்ட்

/

தேர்தல் வழக்கு: ஏட்டுக்கு வாரன்ட்

தேர்தல் வழக்கு: ஏட்டுக்கு வாரன்ட்

தேர்தல் வழக்கு: ஏட்டுக்கு வாரன்ட்


ADDED : பிப் 06, 2024 12:37 AM

Google News

ADDED : பிப் 06, 2024 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : 2011 சட்டசபை தேர்தலின்போது தி.மு.க.,சார்பில் பிரசாரத்திற்காக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மதுரை மாவட்டம் மேலுார் அருகே அம்பலகாரன்பட்டி கோயிலுக்கு வந்து கட்சியினரை சந்தித்தார். தேர்தல் விதிகள் மீறப்படுவதாகக்கூறி வீடியோ எடுக்க அப்போதைய தாசில்தார் காளிமுத்து உத்தரவிட்டார். இதனால் தன்னை தி.மு.க.,வினர் தாக்கியதாக கீழவளவு போலீசில் புகார் அளித்தார்.

அழகிரி, மதுரை முன்னாள் துணை மேயர் மன்னன் மற்றும் ரகுபதி உட்பட 21 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. மதுரை நீதித்துறை நடுவர் (ஜெ.எம்.,1) நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது. சம்பவத்தின்போது ஆயுதப்படை ஏட்டாக இருந்த சரவணன் தேர்தல் பறக்கும்படையில் இடம்பெற்றார். வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டார்.

அவருக்கு சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. அவருக்கு வாரன்ட் பிறப்பித்து நீதிபதி முத்துலட்சுமி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us