ADDED : பிப் 18, 2026 05:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: சம்பள உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு., மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மதுரை புதுார் மின் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தலைவர் குழந்தைவேலு தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் சுரேஷ்குமார், பவர் இன்ஜினியர்கள் சங்க செயலாளர் முத்து லட்சுமணன் முன்னிலை வகித்தனர்.
குழந்தைவேலு கூறுகையில், ' மின்வாரியத்தில் 1.40லட்சம்பணியிடங்கள் உள்ளன. இதில் 60 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளதால், ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்து மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். 2023 டிச.1ல் வழங்க வேண்டிய சம்பள உயர்வு இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் போராடுகிறோம்' என்றார்.

