sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பெரம்பலுார் கலெக்டருக்கு எதிராக ஊழியர்கள் கொதிப்பு

/

பெரம்பலுார் கலெக்டருக்கு எதிராக ஊழியர்கள் கொதிப்பு

பெரம்பலுார் கலெக்டருக்கு எதிராக ஊழியர்கள் கொதிப்பு

பெரம்பலுார் கலெக்டருக்கு எதிராக ஊழியர்கள் கொதிப்பு


ADDED : மார் 31, 2025 01:19 AM

Google News

ADDED : மார் 31, 2025 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: தமிழக அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் பாஸ்கரன், பொது செயலர் சீனிவாசன் கூறியதாவது:

பெரம்பலுார் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் கோரிக்கை குறித்து சங்க மாநில தலைவர் காந்திமதிநாதன், பொது செயலர் பிரபு உட்பட நிர்வாகிகள் கலெக்டர் கிரேஸ் லால்ரின்டிகிபச்சாவ், திட்ட அலுவலர் தேவநாதனை சந்திக்க சென்றனர். நீண்ட நேரம் காத்திருந்தும் அனுமதி கிடைக்கவில்லை.

பின் உள்ளே சென்றவர்களிடம் கோபத்துடன் இருந்த கலெக்டர், நிர்வாகிகள் அளித்த மனுவை கசக்கி வீசி கடுமையாக பேசினார். அவரது உத்தரவின்படி போலீசார் நிர்வாகிகளை கைது செய்தனர். மொபைல் போன்களை பறிமுதல் செய்து, பலமணி நேரம் வாகனத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

இதுபற்றி அறிந்ததும் போலீஸ் அதிகாரிகளிடம், 'இதை அரசு ஊழியர் சங்கம் ஒருபோதும் அனுமதிக்காது. சங்க ரீதியாக இயக்க நடவடிக்கைகள் மாநிலம் முழுதும் நடத்தப்படும்' என, எச்சரிக்கை விடுத்ததும் நிர்வாகிகளை விடுவித்துள்ளனர்.

இதற்கு பெரம்பலுார் கலெக்டர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். வளர்ச்சித்துறை மற்றும் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளை அழைத்து பேச வேண்டும்.

வாகனத்தில் அடைத்து வைத்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி ஏப்., 2ல் அனைத்து தாலுகாக்களிலும் மாலை நேர ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us